Header Ads

ஜி.பி.எஸ் காட்டிய வழியில் சென்று, தண்ணீருக்குள் மோட்டார் வாகனத்தை விட்ட சாரதி..

ஜிபிஎஸ் தொழில்நுட்பம் காட்டிய வழியில் சென்ற சாரதி ஜிபிஎஸ் கூறியதை செவிமடுக்காததால் தண்ணீருக்குள் மோட்டார் வாகனத்தை விட்டுள்ளார்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவுகளில் ஒன்றே ஜிபிஎஸ், என்னும், நாம் செல்லும் வீதிகளை இனங்காண்பதற்கான தொழில்நுட்பம் ஆகும். ஆனால் அதனை முறையாக பயன்படுத்தாமல் விடுவதாலும், சில கோளாறுகளாலும் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

அதனடிப்படையில் அமெரிக்காவின் வெண்டாரி நகரில் வாடகை மோட்டார் வாகனத்தை செலுத்தும் சாரதி ஒருவர் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாகனத்தை செலுத்தியுள்ளார். ஆனால் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் பாதை முடிவதாக கூறிய தகவலை செவிமடுக்காத சாரதி, சாலையை தாண்டி பெரிய ஏரி ஒன்றினுள் மோட்டார் வாகனத்தை விட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் தகவல்கள் சில ஜிபிஎஸ் தொழில்நுட்பம் வீதி முடிவதை கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.