Header Ads

அதிக பனி பொழிவின் விளைவு! ரொறன்ரோ மக்களுக்கு வெள்ளை நிற கிறிஸ்துமஸ் தினம்!

கனடாவில் கடந்த சில நாட்களாக பனி பொழிவு அதிகமாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரொறன்ரோ பகுதிகளில் பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக இருப்பதனால் அங்கு குளிர்கால வானிலை பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவின் சுற்று சூழல் மையம் Vancouver மக்கள் மற்றும் Metro Vancouver மக்கள் இந்த முறை வெள்ளை நிற கிறிஸ்துமஸ் தினத்தைதான் கொண்டாடவுள்ளனர் என தெரிவித்துள்ளது.

ஏனெனில் பசுபிக் பெருங்கடலில் வளர்ந்து வரும் அபாய எச்சரிக்கையின் காரணமாக பனி பொழிவு இன்று (24) முதல் அதிகமாக இருக்கும்.

அதிலும் குறிப்பாக கிறிஸ்துமஸ் தினம் அன்று இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் சற்று எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிறிஸ்துமஸ் தினத்தில் மக்கள் ஏதும் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் தயவுசெய்து இது தொடர்பான அறிவிப்புக்களை சரியாக தெரிந்து கொண்ட பின்னர் பயணங்களை மேற்கொள்ளுமாறு மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.