Header Ads

MPக்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்து மிரட்டிய பெண்: அப்படி என்ன நடந்தது ?



குஜராத் மாநிலம் வல்சாத் தொகுதி பா.ஜனதா எம்.பி. கே.சி பட்டேல் மீது உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில் கே.சி.பட்டேல் எம்.பி. தன்னை பலமுறை கற்பழித்ததாகவும், போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதை தொடர்ந்து அந்த பெண் மீது, கே.சி.பட்டேல் எம்.பி. போலீசில் புகார் கொடுத்து இருந்தார்.

இதனை விசாரிக்க என வந்த பொலிசார் அதிர்ந்து போனார்கள். உண்மையில் குறித்த பெண் பட்டேலை(MP) பார்க்கச் சென்றதோடு அவருக்கு குளிர்பாணத்தில் மயக்க மருந்தை கொடுத்து. பின்னர் அவரும் தானும், அருகில் ஆபாசமாக இருப்பது போல படங்களை எடுத்து மிரட்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பொதுவாக MPக்கள், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தான் இது போன்ற ரவுடிதனத்தில் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் இங்கே கொஞ்சம் வித்தியாசமாக நடந்துள்ளது. MP மயக்கமடைய. பெண் காரணமாக இருந்துள்ளார். ஒரு MP க்கு இவ்வாறு மிரட்டல் விடுக்க இப்பெண்ணுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது ? என்று பொலிசார் திணறியுள்ளார்கள். இவர் பின்னால் பெரும் புள்ளிகள் இருக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.