Header Ads

லண்டன் மத்திய நகரமே லாக் -டவுன்: பாராளுமன்ற பகுதி சுற்றிவளைப்பு பெரும் பொலிசார்



லண்டன் நகரில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்துடன் மோத என வேகமாக ஒரு காரை நபர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அத்தோடு அப்பகுதியில் உள்ள பலரை காரால் இடித்துக் கொல்லவும் அவர் திட்டம் தீட்டியுள்ளார். கடும் வேகத்தில் அவர் காரை ஓட்டி வந்து பலர் மீது மோதியுள்ளார் எனவும்.

பின்னர் அவர் காரை விட்டு இறங்கி ஒரு பொலிஸ்காரரை கத்தியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து பொலிசார் சுட்டதில் அன் நபர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதேவேளை பெரும் பொலிசார் அப்பகுதில் குவிக்கப்பட்டு. அவ்விடத்தை பொலிசார் லாக் டவுன் செய்துள்ளார்கள். ஆளில்லா விமானங்கள் அவ்விடத்தை நோட்டமிடுவதாகவும். தேம்ஸ் நதிக் கரையில் பொலிஸ் படகுகள் ரோந்து செல்வதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.