பிரித்தானிய பிரதமர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டார்: அவரும் லாக் டவுன்
பிரித்தானிய நேரப்படி சரியாக 2.40 க்கு காரில் வேகமாக வந்த நபர், சுமார் 12 பேரை தாக்கி விட்டு. இறுதியாக காரை பாராளுமன்றத்தினுள் செலுத்த முற்பட்டவேளை அவரை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளார்கள். குறித்த நபர் காரில் இருந்து வெளியே இறங்கி கத்தியால் பொலிஸ்காரர் ஒருவரை தாக்கிய வேளை ஏனைய பொலிசார் அவரை நோக்கி சுட்டுள்ளார்கள்.
இதனால் அப்பகுதில் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில். நூற்றுக்கும் அதிகமான பொலிசார் அவ்விடத்தில் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள வேளை. சற்று அருகே தான் நம்பர் 10 டவுனிங் வீதி உள்ளது. அங்கே வசிக்கும் பிரித்தானிய பிரதமர் திரேசா மே தற்போது பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.
அவரது இல்லத்தில் நிலத்தின் கீழ் பாதுகாப்பு அறை உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடந்தால் உடனடியாக அவரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த அறைக்கும் அடைத்து பாதுகாப்பது வழக்கம். புலிகள் விமானத்தின் மூலம் கொழும்புக்கு குண்டு போட்டவேளைகளில். அலரி மாளிகையில் சுரங்கம் வெட்டி அதில் மகிந்த பதுங்கிக் கிடந்தார். அது போல டவுனிங் வீதியிலும் ஒரு சுரங்கம் உள்ளது. இதனை அவ்வளவு எழிதில் உடைத்து உள்ளே செல்ல முடியாது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்