சுபஹான் என்னும் சிறுவனை தள்ளி விழுத்திக் கொன்ற சக மாணவர்கள்- லண்டனில்
சுபஹான் என்னும் 11 வயதுச் சிறுவன், பாலத்தில் இருந்து தண்ணீரில் விழுந்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் பரபரப்பு தோன்றியுள்ளது. இச்சிறுவனின் தாயார் தனது மகனை அவனது பள்ளி சக மாணவர்களே தள்ளிவிட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவனது பள்ளியில் படிக்கும் வெள்ளை இன மாணவர்கள், அடிக்கடி சுபஹானை பகிடிவதை செய்து வந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சிறுவனின் பிரேதத்தை பரிசோதித்த மருத்துவர், அப்படி நடந்திருக்க கூடிய ஆதாரம் எதுவும் காணப்படவில்லை என்று கூறி, தாய் குறிப்பிட்ட சர்சைக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். இருப்பினும் நண்பர்களோடு விளையாடச் சென்ற அவர் எவ்வாறு விழுந்து இறந்தான் என்பது மர்மமாகவே உள்ளது.
இச்சம்பவம் லண்டன் புறநகர் பகுதியான யோக்ஷியாரில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்