பிரித்தானியா ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஈராக்கில் மரண தண்டனை ஏன் இந்த முடிவு
ஈராக்கில் உள்ள மொசூல் நகரில் கடும் சண்டை நிலவி வருகிறது. ஐ.எஸ் அமைப்பு பலமாக இருந்த காலகட்டத்தில் , பிரித்தானியாவில் இருந்து பல முஸ்லீம் இளைஞர்கள் சென்று அவ்வியக்கத்தில் இணைந்துகொண்டார்கள். இவர்கள் அனைவருமே பிரித்தானியா குடியுரிமை பெற்றவர்கள் என்பது வியக்க தக்க விடையம். ஆனால் தற்போது அவர்களில் பலர் ஈராக் படைகளிடம் சரணடைந்து வருகிறார்கள்.
இன் நிலையில் இவ்வாறு சரணடைந்த பிரித்தானிய இளைஞர் ஒருவருக்கு, ஈராக் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனையை தீர்ப்பாக வழங்கியுள்ளது. இது உலகளாவிய ரீதியில் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. சரணடைந்த ஒருவருக்கு மரண தண்டனையா ? அப்படி என்றால் மீதமுள்ள தீவிரவாதிகள் எவ்வாறு சரணடைவார்கள் ? சரணடைந்தாலும் சாவு கிட்டும் என்றால். அவர்கள் போராடியே சாகத் துணிந்துவிடுவார்களே ?
இதனை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று பிரித்தானியா கருதுவதாக ஆங்கில ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்