Header Ads

கடற்கன்னி குழந்தையாக பிறந்த அதிசயம்… பின் குழந்தைக்கு நடந்த சோகம்..



மேற்குவங்க மாநிலத்தில் பெண் ஒருவர் கடற்கன்னி உருவம் கொண்ட குழந்தை பிரசவத்தில் பெற்றெடுத்தார். ஆனால் பிறந்து 4 மணி நேரத்தில் அக்குழந்தை இறந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் முஷ்குரா பிபி (23) என்ற பெண் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு பிரசவத்தில் கடற்கன்னி போன்ற உருவம் கொண்ட குழந்தை பிறந்தது. இடுப்பு பகுதியும் காலுடன் ஒட்டி இருந்ததால் குழந்தையின் பாலினத்தையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் 4 மணி நேரத்தில் குழந்தை உயிரழந்தது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கரப்பமாக இருந்தபோது தாய் சரியான மருந்துகளை எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் குழந்தைக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்து, ரத்த ஓட்டமும் சரியாக கிடைக்கவில்லை. இப்படி பிறக்கும் குழந்தைகளின் நோய்க்கு மெர்மெய்ட் சிண்ட்ரோம் என்கின்றனர்.
இது போன்று கடந்தாண்டு ஒரு குழந்தை இந்தியாவில் பிறந்துள்ளது எனவும் கூறியுள்ளனர். மெர்மெய்ட் சிண்ட்ரோம் 60,000 இருந்து 1,00,000 வரை பிறக்கும் குழந்தைகளில் ஒன்றை தாக்குகிறதாம்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.