உங்க பணமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம், அஜித்தை அவமதித்த பிரபல நடிகர்..
பிரபல நடிகர் விஜயகாந்த், நல்ல மனிதர், நல்ல நடிகர் என்பதையும் தாண்டி, நடிகர் சங்கத் தலைவர் என்றும் நல்ல மனசு உள்ள அரசியல்வாதி என்றும் பெயர் எடுத்தவர். இவரது வாழ்நாளில் இவர் சந்தித்த ஒரு சம்பவம்...உங்களுக்காக
கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் பதவி ஏற்ற போது நடிகர் சங்கத்திற்கு ஏகப்பட்ட கடன் இருந்தது.
எனவே இந்தக் கடனை அடைக்க முடிவு செய்த விஜயகாந்த், கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதில் வரும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்க முடிவு செய்தார்.
அவர் முடிவு செய்தவாறே கலை நிகழ்ச்சி அமோகமாக சிங்கப்பூரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான தமிழ் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது.
இந்த நிகழ்வில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர். ஆனால் இதில் நடிகர் அஜித் மட்டும் கலந்துகொள்ள வில்லை.
அதற்கு முன்னதாகவே நடிகர் அஜித், விஜயகாந்தை நேரில் சந்தித்து நமது கடனை அடைப்பதற்காக ஏன். மக்களிடம் காசு வசூலிக்க வேண்டும். நாமே அடைத்து விடலாமே எனக் கூறி கலைநிகழ்ச்சிக்கு முன்பே ரூ.10 லட்சத்திற்கான காசோலையைக் கொடுத்துள்ளார்.
ஆனால் இதனை வாங்க மறுத்த விஜயகாந்த் நீங்கள் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை மட்டும் சொல்லுங்கள், தற்போது நீங்கள் கொடுக்கும் பணம் வேண்டாம் என்று சொல்லி அஜித்தை அவமதிப்பது போல் கூறி விட்டு, நாங்கள் சொன்ன தேதியில் நிச்சயம் கலை நிகழ்ச்சி நடைபெறும் என்றும், நீங்கள் இப்போது கொடுக்கும் பணத்தை நான் பெற்றால், அது கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக தயாராகிவரும் அனைத்து கலைஞர்களையும் அவமதிக்கும் செயலாகிவிடும் என்றும் கூறினாராம்.
நடிகர் விஜயகாந்த் இப்படிச் செய்தது அப்போதைய சூழலில் அஜித் ரசிகர்களால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், மற்ற கலைஞர்கள் அனைவரும் விஜயகாந்த் செய்தது தான் சரி என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதுபோலவே குறித்த தேதியில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு நடிகர் சங்க கடனும் ஓரளவுக்கு அடைக்கப்பட்டது.
கடந்த 2001ம் ஆண்டு நடிகர் சங்கத்தின் தலைவராக விஜயகாந்த் பதவி ஏற்ற போது நடிகர் சங்கத்திற்கு ஏகப்பட்ட கடன் இருந்தது.
எனவே இந்தக் கடனை அடைக்க முடிவு செய்த விஜயகாந்த், கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தி அதில் வரும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்க முடிவு செய்தார்.
அவர் முடிவு செய்தவாறே கலை நிகழ்ச்சி அமோகமாக சிங்கப்பூரில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான தமிழ் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது.
இந்த நிகழ்வில் கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் கலந்துகொண்டனர். ஆனால் இதில் நடிகர் அஜித் மட்டும் கலந்துகொள்ள வில்லை.
அதற்கு முன்னதாகவே நடிகர் அஜித், விஜயகாந்தை நேரில் சந்தித்து நமது கடனை அடைப்பதற்காக ஏன். மக்களிடம் காசு வசூலிக்க வேண்டும். நாமே அடைத்து விடலாமே எனக் கூறி கலைநிகழ்ச்சிக்கு முன்பே ரூ.10 லட்சத்திற்கான காசோலையைக் கொடுத்துள்ளார்.
ஆனால் இதனை வாங்க மறுத்த விஜயகாந்த் நீங்கள் கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாததற்கான காரணத்தை மட்டும் சொல்லுங்கள், தற்போது நீங்கள் கொடுக்கும் பணம் வேண்டாம் என்று சொல்லி அஜித்தை அவமதிப்பது போல் கூறி விட்டு, நாங்கள் சொன்ன தேதியில் நிச்சயம் கலை நிகழ்ச்சி நடைபெறும் என்றும், நீங்கள் இப்போது கொடுக்கும் பணத்தை நான் பெற்றால், அது கலைநிகழ்ச்சி நடத்துவதற்காக தயாராகிவரும் அனைத்து கலைஞர்களையும் அவமதிக்கும் செயலாகிவிடும் என்றும் கூறினாராம்.
நடிகர் விஜயகாந்த் இப்படிச் செய்தது அப்போதைய சூழலில் அஜித் ரசிகர்களால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால், மற்ற கலைஞர்கள் அனைவரும் விஜயகாந்த் செய்தது தான் சரி என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதுபோலவே குறித்த தேதியில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டு நடிகர் சங்க கடனும் ஓரளவுக்கு அடைக்கப்பட்டது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்