Header Ads

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை, புறக்கணித்தது வடகொரியா..

வடகொரியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், வடகொரியா அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார்.

எனினும் வடகொரியாவிற்கு ரரெக்ஸ் டில்லர்சனால் விடுக்கப்பட்ட அழைப்பை வடகொரியா புறக்கணித்துள்ளது.

அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அழைப்பை புறக்கணித்தது வடகொரியா

ஐக்கிய நாடுகள் சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டமொன்றில கலந்து கொண்டு உரையாற்றிய ரெக்ஸ் டில்லர்சன், வடகொரியா அமெரிக்காவுடன் பேசுவதற்கு விரும்பினால் அமெர்க்கா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன், பேச்சுவார்த்தைக்கு முன்னர் எந்தவிதத் தடையையும் தளர்த்துவதை நாம் அனுமதிக்கமாட்டோம் எனத் தெரிவித்த அவர், இரு நாடுகளுக்குமிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட முன்னர், வடகொரியா தனது ஆயுதச் சோதனைகளை நிறுத்த வேண்டும்’ எனவும் தெரிவித்தார்.

எனினும், பேச்சுவார்த்தைகளுக்காக வடகொரியா விதிக்கும் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அமெரிக்கா அடி பணியாது எனவும் அவர் கூறினார்.

இதற்கு கருத்து தெரிவித்த ஐ.நாவிற்கான வடகொரிய தூதுவர் ஜா சாங் நம், வடகொரியாவின் நலன்களை மீறாத நிலையில், எந்தவொரு நாட்டுக்கும் வடகொரியா ஆபத்தாக இருக்கமாட்டாதெனவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘எமது நாட்டைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்பதை நாம் தெளிவாகக் கூறிக்கொள்வதாகவும், எனினும், அமெரிக்காவுடன் போரை முன்னெடுப்பதற்கு நாம் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளர்.

ஜா சாங் நம்மின் இந்த கருத்து வடகொரியா அமெர்க்காவின் சமாதான பேச்சுவார்த்தைக்கான அழைப்பை புறக்கணித்துள்ளமையை காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.