விஜய் சேதுபதி வாழ்க்கையில், இவ்வுளவு துயரங்களா..?
தனது உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை விஜய் சேதுபதி பிடித்துள்ளார்.
ஆனால்., இந்த நிலையை அடைவதற்கு அவர் எவ்வுளவு துன்பங்களை அனுபவித்துள்ளார் என்பது சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
ராஜபாளையத்தில் பிறந்த விஜய் சேதுபதி BBA படிப்பை முடித்தார். அதன் பிறகு கணக்காளராக துபாயில் சில நாட்கள் வேலை செய்தார். அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை. சினிமாவில் நடிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
சென்னைக்கு திரும்பிய அவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் பெண் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
அதனுடன்., அப்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் விஜய் சேதுபதி நடித்தார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
அதன் பிறகு., பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும்., சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு ராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார்.
தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அடுத்தடுத்து வெளிவந்த., சுந்தர பாண்டியன்., பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை தேடி தந்தன.
விஜய் சேதுபதி தனக்கென்று ஒரு பாணியை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தினார். சூது கவ்வும்., கவண், தர்மதுரை, சேதுபதி போன்ற படங்கள் வணிக ரீதியாகவும்., விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன.
சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சினிமாவில் வசனம் பேசும் நடிகர்கள் பெரும்பாலும் பிறருக்கு உதவும் மனம் கொண்டிருப்பதில்லை.
ஆனால்., விஜய் சேதுபதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மாணவர்களுக்காக., பல லட்சம் ரூபாயை கொடுத்து உதவினார். அடுத்தடுத்து ஏழை பள்ளி குழந்தைகளுக்காக தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.
விஜய் சேதுபதி சினிமாவில் மட்டும் ஹீரோ இல்லை.., நிஜத்திலும் ஹீரோதான்.
ஆனால்., இந்த நிலையை அடைவதற்கு அவர் எவ்வுளவு துன்பங்களை அனுபவித்துள்ளார் என்பது சிலருக்கு தெரிய வாய்ப்பில்லை.
ராஜபாளையத்தில் பிறந்த விஜய் சேதுபதி BBA படிப்பை முடித்தார். அதன் பிறகு கணக்காளராக துபாயில் சில நாட்கள் வேலை செய்தார். அந்த வேலை அவருக்கு பிடிக்கவில்லை. சினிமாவில் நடிக்கவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
சென்னைக்கு திரும்பிய அவர் கூத்துப்பட்டறையில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அந்த நேரத்தில் பெண் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
அதனுடன்., அப்போது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்காக பல குறும்படங்களில் விஜய் சேதுபதி நடித்தார்.
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார்.
அதன் பிறகு., பிரபு சாலமனின் லீ திரைப்படத்திலும்., சுசீந்திரனின் வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல போன்ற திரைப்படங்களில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.
சுசீந்திரன் இவரை தென்மேற்கு பருக்காற்று இயக்குநர் சீனு ராமசாமியிடம் அறிமுகப்படுத்தினார்.
தென்மேற்கு பருவக்காற்று திரைப்படம் விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அடுத்தடுத்து வெளிவந்த., சுந்தர பாண்டியன்., பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், போன்ற திரைப்படங்கள் அவருக்கு நல்ல பெயரை தேடி தந்தன.
விஜய் சேதுபதி தனக்கென்று ஒரு பாணியை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தினார். சூது கவ்வும்., கவண், தர்மதுரை, சேதுபதி போன்ற படங்கள் வணிக ரீதியாகவும்., விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றன.
சமீபத்தில் வெளிவந்த 'விக்ரம் வேதா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
சினிமாவில் வசனம் பேசும் நடிகர்கள் பெரும்பாலும் பிறருக்கு உதவும் மனம் கொண்டிருப்பதில்லை.
ஆனால்., விஜய் சேதுபதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மாணவர்களுக்காக., பல லட்சம் ரூபாயை கொடுத்து உதவினார். அடுத்தடுத்து ஏழை பள்ளி குழந்தைகளுக்காக தன்னால் முடிந்த உதவியை செய்து வருகிறார்.
விஜய் சேதுபதி சினிமாவில் மட்டும் ஹீரோ இல்லை.., நிஜத்திலும் ஹீரோதான்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்