ஆண்டுக்கு ஒருமுறை தங்கமாக மாறும் நந்தி: எங்கு தெரியுமா..?

தமிழகத்தின் வடதிசையில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் பகுதியில் அமைந்துள்ள ரிஷபேஸ்வரர் எனும் கோவில் அமைந்துள்ளது.
இந்த சிவன் கோவிலில் உள்ள சிறப்பு என்னவெனில் இங்குள்ள நந்தி சிலை தங்கமாக மாறுமாம். அதுவும் இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்குமாம்.
இந்த கோவில் கட்டப்பட்டு 200 வருடங்களுக்கு மேல் ஆகிறது, ஆனாலும் இன்றும் பழமை மாறாமல் அதே பொலிவுடன் காணப்படுகிறதாம்.
தங்க நிறமாக மாறும் நந்தியே இந்த கோவிலின் சிறப்பம்சமாக திகழ்கிறது, தங்க நிறத்தில் காட்சியளிக்கும் நந்தியின் அதிசய நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் பார்க்க முடியுமாம்.
பல சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இந்த செங்கம் பகுதியில் தங்க நிறமாக மாறும் நந்தியின் அதிசய நிகழ்வை காண்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் விரும்பி தரிசித்து செல்கின்றனராம்.
No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்