Header Ads

ஆட்டோவில் ஏறிவந்த இரண்டு சிறுமிகளை, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய ஓட்டுநர்.!

ஆந்திராவில் இரண்டு சிறுமிகளை ஆட்டோ ஓட்டுநர் உட்பட இருவர் பாலியல் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் உள்ள அர்கு என்ற ஊரில் இரண்டு சிறுமிகள் அருகில் உள்ள வார சந்தைக்கு சென்று விட்டு ஆட்டோவில் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது ஆட்டோவில் பழுது ஏற்பட்டுள்ளதாக கூறி, ஆட்டோவில் இருந்த மற்ற பயணிகளை ஓட்டுநர் இறக்கி விட்டுள்ளார்.

அதன் பிறகு டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் இணைந்து, அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் அராக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

இதனையடுத்து ராஜு என்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார் தப்பியோடிய அவரது நண்பரை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் அதே ஊரில் உள்ள உயர் நிலை பள்ளியில் பயின்று வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.