யாழ் திரை அரங்கில் பொலிசார் மற்றும் காவாலிகள் மோதல்: ஹாலிடேயில் சென்ற பொலிஸ் படுகாயம்
யாழ் நகரில் உள்ள திரை அரங்கு ஒன்றில், நேற்று படம் பார்க்கச் சென்ற 3 இளைஞர்கள் டிக்கெட் தருமாறு கோரி காவலாளியோடு தர்கத்தில் ஈடுபட்டார்கள். இதேவேளை ஹாலிடேயில் இருந்ததாக கூறப்படும் பொலிசார் ஒருவரும் நேரம் தாமதமாக வந்து படத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார்.
ஆனால் படம் ஆரம்பித்துவிட்டதாகவும். இனி டிக்கெட்டை தர முடியாது எனவும் காவலாளி கூறவே குறித்த 3 இளைஞர்களும் அவரை பலமாக தாக்கியுள்ளார்கள். இதேவேளை விடையம் தெரியாத இந்த பொலிஸ்காரர் இப்பிரச்சனையில் இளைஞர்களுக்கு ஆதரவாக பேசச் சென்றவேளை. அதனை புரிந்துகொள்ளாத இளைஞர்கள் சிங்கள பொலிஸ்காரரையும் சரமாரியாக தாக்கி தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனை அடுத்து படுகாயமடைந்த சிங்கள பொலிஸ்காரர் மற்றும் காவலாளி ஆகியோர் யாழ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்