Header Ads

ரம்பா மற்றும் கணவரின் சமரசம் தோற்றுப் போனதா ? கவுன்சில் மடையை உடைக்கும் நிலை



நடிகை ரம்பா தனது கணவரோடு தன்னை சேர்த்துவைக்கவேண்டும் என்று கூறி, சென்னை நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை அடுத்து ஈழத் தமிழரான அவரது கணவர் கனடாவில் இருந்து சென்னை வந்தார். இது நாள்வரை தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு வந்த ரம்பா வேறு வழியின்றி கணவரோடு சேர்ந்து வாழ விரும்புவதாக கூறினார்.

இதற்கு அமைவாக அவர்கள் இருவரையும் ஒரு நடுவர் முன்(கவுன்சில்) பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வருமாறு நீதிபதி உத்தரவிட்ட நிலையில். கவுன்சிலர் முன் பேசிய இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்துள்ளதாக விடையம் அறியந்த வட்டாரத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

கனடாவுக்கு பிள்ளைகளோடு திரும்பி வரவேண்டும் என்பதே கணவரது விருப்பமாக உள்ளது என்றும். இருப்பினும் ரம்பா தனக்கு கனடா பிடிக்கவில்லை சென்னையில் இருவரும் தங்கலாமே என்று கூறிவருவதாகவும் தெரியவருகிறது. இழு பறி நிலை தொடர்வதாக கூறப்படுகிறது. இன் நிலையில் நல்லதொரு தீர்வை பெற கவுன்சிலர் படாத பாடு படுவதாக கூறப்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.