லண்டனில் தாஸ் வெள்ளைக்கார மனைவியை பிள்ளையை அடித்து கொன்றுவிடு தப்பி ஓட்டம்
லண்டன் பின்ஸ்ஃபெரி பார்க்கில் வசித்துவந்த சாகர் தாஸ்(33) என்பவர், வெள்ளை இனப் பெண் ஒருவரோடு குடும்பம் நடத்தி வந்துள்ளார். நேற்றைய தினம் இரவு 11.00 மணிக்கு அவர்கள் குடியிருந்த வீட்டில் பெரும் சத்தம் கேட்டதாகவும். எனது பிள்ளைகள் , எனது பிள்ளைகளை காப்பாற்றுங்கள் என்று கதறியவாறு குறித்த வெள்ளைக்காரப் பெண் வெளியே ஓடிவந்துள்ளார்.
இதனை அடுத்து அயலவர்கள் பொலிசாருக்கு அறிவித்தவேளை. பொலிசார் வருவதற்கு முன்னரே தாஸ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆனால் அவர் சுத்தியலால், தனது மகனையும் மகளையும் மற்றும் மனைவியையும் தாக்கியுள்ளார். இதில் அவரது மகன் பரிதாபமாக இறந்துள்ள நிலையில். மகள் மற்றும் மனைவி ஆகியோர் கடும் காயங்களோடு உயிருக்கு போராடி வருவதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பெரும் தகறாறில் முடிவந்துள்ளது. வீட்டில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளார்கள்.



No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்