குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு அவசர அறிவித்தல்! இந்த நாடுகளுக்கு வீசா இல்லையாம்
பாகிஸ்தான் உட்பட ஐந்து முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு விசா வழங்குவதை குவைத் தற்காலிகமாக நிறுத்தியிருக்கிறது. சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் என்பனவே ஏனைய நான்கு நாடுகளாகும்.
கடந்த வெள்ளியன்று ஏழு முஸ்லிம் நாடுகளின் பிரஜைகளுக்கு அமெரிக்க விசா வழங்கப்பட மாட்டாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தீவிர இஸ்லாமிய பயங்கரவாதிகள் குவைத்துக்குள் நுழைய முயற்சிக்கலாம் என்ற அச்சத்தின் பேரிலேயே இந்த விசா அனுமதித் தடையை குவைத் விதித்துள்ளது.
ஏற்கனவே 2011ஆம் ஆண்டு சிரிய நாட்டுப் பிரஜைகளுக்கு விசா வழங்குவதை குவைத் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்