Header Ads

செல்போன் வாங்­கிய கடனை அடைக்க சிறு­வனை கட­த்தி கொலை­ செய்த இளை­ஞன்



செல்போன் வாங்­கிய 30,000 ரூபாவை அடைக்க சிறு­வனை இளை ஞர் ஒருவர் கடத்தி கொலை செய்த சம்­ப­வ­மொன்று தமி­ழ­கத்தில் இடம்­பெற்­றுள்­ளது.  தமிழகத்தின் ஆரணி அரு­ண­கிரி சத்­தி­ரத்தை சேர்ந்­தவர் தாமோ­தரன். வங்கி அதி­காரி. இவ­ரது மகன் யுவராஜ் (12). இவர் அதே பகு­தியில் இருக்கும் நக­ராட்சி பாட­சா­லையில் தரம் 8 இல் படித்து வரு­கிறார். முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா மறை­வை­யொட்டி டிசம்பர் 6-ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை 3 நாட்கள் விடு­முறை விடப்­பட்­டி­ருந்­தது. இதனால் யுவராஜ் வீட்­டி­லேயே இருந்­துள்ளார்.கடந்த 8-ஆம் திகதி விடு­முறை நாளில் வீதியில் விளையாடி கொண்டிருந்த யுவராஜ் மாய­மா­கி­யுள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் உற­வி­னர்கள் பல இடங்­களில் தேடியும் கிடைக்­காத நிலையில் பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து ஆரணி நக­ரி­லுள்ள அனைத்து கண்­கா­ணிப்பு கெம­ராக்­களின் காட்சி பதி­வு­களை ஆய்வு செய்­தனர்.இந்­நி­லையில் கடந்த 10-ஆம் திகதி விவ­சாய கிணற்றில் யுவராஜ் சட­ல­மாக மிதப்­பதாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்துள்­ளது. சிறு­வனின் இடுப்பு பகு­தியில் கயிற்றால் கல் கட்­டப்­பட்­டி­ருந்­தது. எனவே, சிறுவன் கொலை செய்­யப்­பட்டு கல்லால் கட்டி கிணற்றில் வீசி­யது தெரி­ய­வந்­தது.உடல் மற்றும் முகம், தலையில் இரத்த காயங்கள் இருந்­துள்­ளன. யுவ­ராஜை கடத்­திய பின்னர் கொலை­யாளி அடித்து, துன்­பு­றுத்தி சித்தி­ர­வதை செய்­தி­ருக்­கலாம் என உற­வி­னர்கள் சந்­தேகம் எழுப்­பினர்.

இத­னி­டையே சி.சி.ரி.வி காட்­சியில் சிறுவன் யுவ­ராஜை, வங்கி அதி­காரி தாமோ­த­ரனின் தூரத்து உற­வி­ன­ரான ஆர­ணியை சேர்ந்த ஜெயக்­குமார் ( 24) என்­பவர் மோட்டார் சைக்­கிளில் அழைத்துச் சென்­றமை தெரி­ய­வந்­தது. ஜெயக்­கு­மாரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து விசா­ரணை செய்­ததில், சிறுவன் யுவ­ராஜை மோட்டார் சைக்­கிளில் கடத்தி சென்று ஜெயக்­குமார் கொலை செய்­ததை ஒப்புக் கொண்டார்.இத­னை­ய­டுத்து ஜெயக்­கு­மாரை பொலி ஸார் கைது செய்­தனர்.இது குறித்து ஜெயக்­குமார் அளித்த வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, நான் ஒன்லைன் மூலம் செல்­போன்­களை விலைக்கு வாங்கி கூடுதல் விலை நிர்­ண­யித்து விற்­பனை செய்து வந்தேன். செல்­போன்கள் வாங்­கி­யதில் எனக்கு 30,000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்­பட்­டது.இந்த தொகையை நானே கட­னாக தான் வாங்கி இருந்தேன். வீட்டில் கேட்டு பார்த்தேன் பணம் தர­வில்லை.

அப்­போது தான் எனது உற­வி­ன­ரான வங்கி அதி­காரி தாமோ­த­ரனின் ஞாபகம் எனக்கு வந்­தது.அவ­ரது மகனை கடத்தி மிரட்­டினால் எனக்கு தேவை­யான 30,000 பணம் கிடைக்கும் என திட்­ட­மிட்டேன். அதன்­படி சிறுவன் யுவ­ராஜை ஆசை வார்த்தை கூறி மோட்டார் சைக்­கிளில் கடத்­தினேன்.என்னால் மிரட்டி பணம் பறிக்க முடி­ய­வில்லை. பின்னர் மாட்டிக் கொள்வோம் என பயந்து சிறு­வனை கொன்று வயிற்றில் கல்லை கட்டி கிணற்றில் வீசி­விட்டு தப்­பினேன். விசா­ர­ணையை தொடக்கம் முதலே கண்­கா­ணித்தேன்.முதலில் சிறுவன் தற்­கொலை செய்து கொண்­டி­ருக்­கலாம் என பொலிஸார் நினைத்­ததாக கேள்­வி­ப்பட்டேன். தற்­கொலை செய்து கொண்­டி­ருக்­கலாம் என பொலிஸார் நினைத்­ததாக கேள்­வி­பட்டேன்.

இதனால் நிம்­ம­தி­ய­டைந்தேன். இந்த நிலையில் கெமரா காட்­சியை வைத்து பொலிஸார் என்னை பிடித்து விட்டார்கள் என கூறியுள்ளார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.