33,000 அடியில் பறந்த விமானத்தில் இருந்து விழுந்து உயிர் தப்பிய பெண் இவர்
33,000 அடி (10,000 மீற்றர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து உயிர் தப்பி, 44 வருடங்கள் உயிர்வாழ்ந்த பெண்ணொருவர் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். சேர்பியாவைச் சேர்ந்த வெஸ்னா வுலோவிக் என்பவரே இப்பெண்ணாவார். மேற்படி அனர்த்தத்தில் ஆச்சரியகரமாக உயிர்தப்பிய அவர் தனது 66 வயதில் இறந்துள்ளார்.
1972 ஜனவரி 26 ஆம் திகதி மேற்படி விமான அனர்த்தம் இடம்பெற்றது. அப்போது 23 வயது யுவதியாக இருந்த வெஸ்னா வுலோவிக், யூகோஸ்லாவியாவின் (சேர்பியா, பொஸ்னியா, குரோஷியா உட்பட பல குடியரசுகள் ஒன்றிணைந்த நாடு) விமான சேவை நிறுவனமான யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றி வந்தார். 1972 ஜனவரி 26 ஆம் திகதி யூகோஸ்லாவ் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் டக்ளஸ் டி.சி 9 விமானமொன்றில் வெஸ்னா வுலோவிக் பணியில் இருந்தார்.
அவ்விமானம் சுவீடனின் ஸ்டொக்ஹோம் நகரிலிருந்து புறப்பட்டு டென்மார்க்கின் கொப்பன்ஹேகன் நகரில் தரையிறங்கிய பின் யூகோஸ்லாவியாவின் தலைநகர் பெல்கிரேட்டை நோக்கிப் புறப்பட்டது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்