லண்டனில் தமிழ் பெடியனின் அந்தரங்கத்தை முறுக்கிய பெண்- நடந்தது என்ன என்று தெரியுமா ?
லண்டனில் உள்ள டைகர் என்னும் இரவு நேர கழியாட்ட விடுதிக்கு 19 வயதுப் பெண் ஒருவர் சென்றுள்ளார். அதிகாலை 1.30 மணியளவில் அவர் அங்கிருந்து வெளியேறும் போது மதுபோதையில் இருந்துள்ளதோடு, வாசல் எங்கே என்று தெரியாமல் வேறு ஒரு வாசல் வழியால் வெளியேற முற்பட்டுள்ளார். இன் நிலையில் அவரை பின் தொடர்ந்து வந்த யதுகுலன் பாஸ்கர மூர்த்தி என்னும் நபர், அப்பெண்ணை நிலத்தில் தள்ளி கற்பழிக்க முயன்றுள்ளார். இங்கே எல்லா இடங்களிலும் கமரா உள்ளது. உன்னை பொலிசார் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று அப்பெண் கூச்சலிட்டும் இவர் கேட்ட பாடாக இல்லை.
இன் நிலையில் யதுகுலனின் ஆண் உறுப்பை இறுக்கிப் பிடித்த அப் பெண், அதனை முறுக்கி வலியை ஏற்படுத்தி அதனைப் பயன்படுத்தி தப்பிச் சென்றுவிட்டார். பின்னர் அவர் பொலிசாருக்கு தெரிவித்த தகவலை அடுத்து பொலிசார் CCTV கமராவைப் பார்த்து யதுகுலனை கைதுசெய்துள்ளார்கள். லண்டனில் உள்ள கிங்ஸ் பெரி என்னும் இடத்தில் இவர் வசித்து வருவதாக அறியப்படுகிறது. இருப்பினும் தன்னை குறித்த பெண் துன்புறுத்தியதாக முதலில் அவர் நீதிமன்றில் தெரிவித்து. தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். ஆனால் CCTV கமராவைப் பார்த்த பொலிசார் அதனை நீதிபதிக்கும் காட்டி புரியவைத்துள்ள நிலையில்.
வேறு வழி இன்றி, தாம் அந்தப் பெண்ணை கற்பழிக்க முயன்றதாகவும். ஆனால் மதுபோதையில் இது நடந்துவிட்டதாகவும் அவர் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. ஒரு முறுக்கு முறுக்கியதால், பெண் தப்பினார் என்ற தலைப்பில் ஆங்கில ஊடங்கள் செய்தியை வெளியிட்டுள்ளது.

இனத்திற்கு பெருமை சேர்த்த போக்கிரி
ReplyDelete