தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து தள்ளிச்சென்ற மகன்..
விருகம்பாக்கம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் கண்ணன், விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு அருண்குமார், அஜித்குமார் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களுடன் கண்ணனின் தாய் புவனேஸ்வரி (வயது 85) தங்கி இருந்தார். இவர்களது சொந்த ஊர் கம்பத்தை அடுத்த உத்தமபாளையம் ஆகும்.
அருண்குமார் தனியார் கால் டாக்சி நிறுவனத்திலும், அஜித்குமார் விருகம்பாக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது 2 பேரின் வருமானத்தில் குடும்பம் நடந்து வந்தது.
ஆரம்பத்தில் அருண்குமார் மட்டும் சென்னையில் தங்கி இருந்தார். பின்னர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து வசித்து வந்தார். அவர்கள் ரூ. 11 ஆயிரம் வீட்டு வாடகை கொடுத்து தங்கி இருந்தனர்.
வயதான புவனேஸ்வரி வீட்டில் தங்கி இருந்தது அக்கம் பக்கத்தில் வீட்டில் வசித்தவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் புவனேஸ்வரியை அடிக்கடி குறை கூறி வந்தனர்.
மேலும் வெளிநாட்டில் தங்கி உள்ள வீட்டின் உரிமையாளரிடமும் அடிக்கடி புகார் செய்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு வீட்டு வாடகை உயர்த்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு அருண்குமார் தான் காதலித்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்தார். அதன் பின்னர் அவர் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. இதனால் அருண்குமாரின் வருமானத்தை நம்பி இருந்த கண்ணனின் குடும்பம் தள்ளாடியது. வறுமையில் சிக்கிய அவரால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனையும் அக்கம் பக்கத்தினர் சுட்டிக்காட்டி ஏளனம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே புவனேஸ்வரிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இது பற்றி ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் யாரும் வரவில்லை. மேலும் கண்ணனின் குடும்பத்தினரை உறவினர்கள் கைவிட்டனர்.
இதனால் அவர் வருத்தத்தில் இருந்தார். நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த புவனேஸ்வரி திடீரென இறந்தார். இதுபற்றி அவர் உறவினர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் யாரும் வர விருப்பம் தெரிவிக்கவில்லை.
தாய் இறந்தது பற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்தால் அவர்கள் கூடுதலாக வேறு ஏதேனும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று கண்ணன் நினைத்தார். இதையடுத்து தாய் புவனேஸ்வரி உடலை பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முடிவு செய்தார்.
நேற்று இரவு முழுவதும் தாயின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. அப்போது கண்ணன், அவரது மனைவி சாந்தி, மகன் அஜித்குமார் மட்டும் வீட்டில் இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் புவனேஸ்வரியின் உடலை மோட்டார் சைக்கிளில் படுத்தபடி வைத்தார். பின்னர் அதனை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் மயானத்துக்கு கண்ணன் தள்ளிச் சென்றார். உடல் கீழே விழாமல் பிடிப்பதற்காக மனைவி சாந்தியும் உடன் நடந்து சென்றார். அதிகாலை நேரம் என்பதால் இதுபற்றிய தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவில்லை. இதற்கிடையே மின்மயானம் வழியாக சென்ற பொது மக்கள் மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து வரப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப வறுமை மற்றும் உறவினர்கள் கைவிட்டதால் தாய் புவனேஸ்வரி உடலை மின் மயானத்துக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததாக கண்ணன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து புவனேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன், அவரது மனைவி சாந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து மகன் தள்ளி வந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர்களுடன் கண்ணனின் தாய் புவனேஸ்வரி (வயது 85) தங்கி இருந்தார். இவர்களது சொந்த ஊர் கம்பத்தை அடுத்த உத்தமபாளையம் ஆகும்.
அருண்குமார் தனியார் கால் டாக்சி நிறுவனத்திலும், அஜித்குமார் விருகம்பாக்கத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களது 2 பேரின் வருமானத்தில் குடும்பம் நடந்து வந்தது.
ஆரம்பத்தில் அருண்குமார் மட்டும் சென்னையில் தங்கி இருந்தார். பின்னர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து வசித்து வந்தார். அவர்கள் ரூ. 11 ஆயிரம் வீட்டு வாடகை கொடுத்து தங்கி இருந்தனர்.
வயதான புவனேஸ்வரி வீட்டில் தங்கி இருந்தது அக்கம் பக்கத்தில் வீட்டில் வசித்தவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் புவனேஸ்வரியை அடிக்கடி குறை கூறி வந்தனர்.
மேலும் வெளிநாட்டில் தங்கி உள்ள வீட்டின் உரிமையாளரிடமும் அடிக்கடி புகார் செய்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு வீட்டு வாடகை உயர்த்தப்பட்டு விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த மாதங்களுக்கு முன்பு அருண்குமார் தான் காதலித்த பெண்ணுடன் ஓட்டம் பிடித்தார். அதன் பின்னர் அவர் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை. இதனால் அருண்குமாரின் வருமானத்தை நம்பி இருந்த கண்ணனின் குடும்பம் தள்ளாடியது. வறுமையில் சிக்கிய அவரால் கடந்த 2 மாதமாக வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லை. இதனையும் அக்கம் பக்கத்தினர் சுட்டிக்காட்டி ஏளனம் செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே புவனேஸ்வரிக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இது பற்றி ஊரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் யாரும் வரவில்லை. மேலும் கண்ணனின் குடும்பத்தினரை உறவினர்கள் கைவிட்டனர்.
இதனால் அவர் வருத்தத்தில் இருந்தார். நேற்று இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த புவனேஸ்வரி திடீரென இறந்தார். இதுபற்றி அவர் உறவினர்களுக்கு தெரிவித்தும் அவர்கள் யாரும் வர விருப்பம் தெரிவிக்கவில்லை.
தாய் இறந்தது பற்றி அக்கம் பக்கத்தினருக்கு தெரிந்தால் அவர்கள் கூடுதலாக வேறு ஏதேனும் நெருக்கடி கொடுப்பார்கள் என்று கண்ணன் நினைத்தார். இதையடுத்து தாய் புவனேஸ்வரி உடலை பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய முடிவு செய்தார்.
நேற்று இரவு முழுவதும் தாயின் உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. அப்போது கண்ணன், அவரது மனைவி சாந்தி, மகன் அஜித்குமார் மட்டும் வீட்டில் இருந்தனர்.
இன்று அதிகாலை 4 மணி அளவில் புவனேஸ்வரியின் உடலை மோட்டார் சைக்கிளில் படுத்தபடி வைத்தார். பின்னர் அதனை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பத்தில் உள்ள மின் மயானத்துக்கு கண்ணன் தள்ளிச் சென்றார். உடல் கீழே விழாமல் பிடிப்பதற்காக மனைவி சாந்தியும் உடன் நடந்து சென்றார். அதிகாலை நேரம் என்பதால் இதுபற்றிய தகவல் அக்கம் பக்கத்தினருக்கு தெரியவில்லை. இதற்கிடையே மின்மயானம் வழியாக சென்ற பொது மக்கள் மோட்டார் சைக்கிளில் உடல் எடுத்து வரப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்ப வறுமை மற்றும் உறவினர்கள் கைவிட்டதால் தாய் புவனேஸ்வரி உடலை மின் மயானத்துக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்ததாக கண்ணன் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து புவனேஸ்வரியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கண்ணன், அவரது மனைவி சாந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாயின் உடலை மோட்டார் சைக்கிளில் வைத்து மகன் தள்ளி வந்த சம்பவம் விருகம்பாக்கம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்