இலங்கை கடல் பகுதியில் ரூ.1¾ கோடி மதிப்புள்ள 7 கிலோ தங்கம் பறிமுதல்..
இலங்கை கடற்படைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கல்பட்டி கந்தகுலியா கடற்கரை பகுதியில் கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த ஒரு படகை சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அந்த படகில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் இருப்பதை அறிந்த இலங்கை கடற்படையினர் படகு முழுவதும் சோதனையிட்டனர்.
அப்போது 7 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அந்த படகையும், அதில் இருந்த 2 பேரையும் இலங்கை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்க இலாகாவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல ராமேசுவரத்தில் உள்ள மத்திய புலனாய்வு துறையினரும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது 7 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தங்கத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் அந்த படகையும், அதில் இருந்த 2 பேரையும் இலங்கை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.1¾ கோடி என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிடிபட்ட இருவரிடமும் சுங்க இலாகாவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல ராமேசுவரத்தில் உள்ள மத்திய புலனாய்வு துறையினரும் இந்த கடத்தல் சம்பவத்தில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்