சிறுவனை உண்பதற்காக சுற்றிவளைத்த சுறாக்கள்: வைரலாகும் அதிர்ச்சிக் காட்சிகள் இதோ...
பஹாமாஸ் நாட்டின் கடற்கரை ஒன்றில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடலில் கரையோரமாக நீருக்குள் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவனை உண்பதற்காக நான்கு சுறாக்கள் சுற்றிவளைப்பதே அந்த சம்பவமாகும்.
முழங்கால் அளவு தண்ணீரில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுவனை நோக்கி நான்கு சுறாக்கள் சுற்றிவளைத்து வருகின்றன. சுறாக்கள் வருவதை அறியாத சிறுவன் தண்ணீரில் தொடர்ந்தும் விளையாடிக்கொண்டிருக்கின்றான். பின்னர் கரையை நோக்கி வேகமாக ஓடி விடுகிறான். ஆனால் சுறாக்களை கண்டு அல்ல என்பது தான் உண்மை. தற்செயலாக அவன் அங்கே இருந்து சென்றுள்ளான்.
இவை அனைத்தும் CCTV கமராவில் பதிவாகியுள்ளது. மரணத்தில் இருந்து 1 செக்கனில் அவன் தப்பியுள்ளான் என்பதே உண்மை.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்