Header Ads

70 ஐஸ் கட்டிகள் போடப்பட்ட, நீச்சல் குளத்தில் குதித்து புத்தாண்டு கொண்டாட்டம்..

மேகாலாயாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மைனஸ் வெப்பநிலையில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி விளையாடினர். அதிக நேரம் நீரில் உள்ளவர்களுக்கு வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். இரவு 11 மணியளவில் 70 ஐஸ் கட்டிகள் போடப்பட்ட நீச்சல் குளத்திற்குள் குதித்து விளையாடினர்.

ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த போட்டி நடத்தப்படுவதாக கூறினர். ராணுவ வீரர்கள் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்கின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் எல்லையில் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தபடுகிறது.

கடந்த 21 ஆண்டுகளாக இந்த போட்டியை நடத்தி வருகின்றனர். மேலும் ஊழலுக்கு எதிராக போராட வேண்டும் என உறுதியளித்தனர். நாட்டின் பல இடங்களில் புத்தாண்டை மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.