பாதுகாப்பு துறையில், வடகொரியா தன்னிறைவு பெறும் கிம் ஜாங் உன் சபதம்..
பாதுகாப்புத்துறையில் வடகொரியா தன்னிறைவு பெறும்' என தன் தந்தையின் நினைவு நாளில் சபதம் எடுத்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.
20-ம் நூற்றாண்டின் இறுதியில் வடகொரியாவைத் தொடர்ந்து ஆண்டு வந்தவர் வடகொரியாவின் முன்னாள் அதிபரும் இந்நாள் அதிபரின் தந்தையுமான கிம் ஜாங் இல். இவரது ஆறாவது நினைவு தினம் வடகொரியாவில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவின் முன்னேற்றத்துக்காகத் தற்போதைய சபதம் எடுத்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
20-ம் நூற்றாண்டின் இறுதியில் வடகொரியாவைத் தொடர்ந்து ஆண்டு வந்தவர் வடகொரியாவின் முன்னாள் அதிபரும் இந்நாள் அதிபரின் தந்தையுமான கிம் ஜாங் இல். இவரது ஆறாவது நினைவு தினம் வடகொரியாவில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியாவின் முன்னேற்றத்துக்காகத் தற்போதைய சபதம் எடுத்துள்ளார்.
உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் தொடர் ஏவுகணை மற்றும் அணுகுண்டுச் சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுதச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியா மீது ஐ.நா சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதிலும் அதனை பொருட்படுத்தாமல் வடகொரியா தன்னிச்சையாக செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜப்பான் சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வடகொரியாவை வெளிப்படையாகவே தாக்கிப் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்