Header Ads

தீயில் கருகிய பிஞ்சு பாலகன்! கனடாவில் நேர்ந்த துயரச் சம்பவம்!

மூன்று வயதுடைய  சிறுவன் ஒருவன் தீயில் கருகி இறந்த கோரச் சம்பவம் ஒன்று கனடா ஒன்ராறியோவில் இடம்பெற்றுள்ளது.

கனடாவின்  ஒன்ராறியோ கலிடோனியாவிற்கு அருகாமையில்  இடம்பெற்ற தீயில் மூன்று வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

தீயில் கருகிய பிஞ்சு பாலகன்! கனடாவில் துயர சம்பவம்!

கடந்த வெள்ளிக்கிழமை(08)  பகல் வீடொன்றினுள் தீ பிடித்ததாக தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடந்து அந்த  இடத்திற்கு விரைந்த தீயணைப்பு அதிகாரிகள் புகை சூழ்ந்திருந்த வீட்டிற்குள் நுழைந்து உள்ளே இருந்த மூன்று பிள்ளைகளை மீட்டனர்.

இருப்பினும் மூன்று பிள்ளைகளில் ஒரு சிறுவன் இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவித்தனர். மற்றைய இரு பிள்ளைகளும் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்திற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. மேலும் குறித்த வீட்டில் ஆறு பிள்ளைகள் உட்பட ஒன்பது பேர் வசித்ததாக கூறப்படுகின்றது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.