Header Ads

2018ல் உலகம் முழுவதும் வருகிறது, புதிய ஆபத்து..! அதிர்ச்சித் தகவல்..

வரும் 2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புவியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. கொலரடோ பல்கலையை சேர்ந்த ராபர்ட் பில்ஹம் மற்றும் மோன்டானா பல்கலை.,யின் ரெபிக்கா பென்டிக் ஆகிய ஆராச்சியாளர்கள் நடத்திய ஆய்வு அறிக்கைகள் இந்த ஆண்டு ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்., இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதே போன்ற ஆய்வு முடிவு அக்டோபர் மாதமும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதில், ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் வழக்கமாக ஆண்டுக்கு 15 முதல் 20 முறை நிகழும். ஆனால் புவியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக 2018 ல் சராசரியாக 25 முதல் 30 முறை பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஏற்படும்.

2018 பூமி நடுங்கும்
நாள்தோறும் சில மில்லிசெகண்ட் என்ற அளவில் புவியின் சுழற்சியில் மாற்றம் ஏற்படும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக புவி சுழற்சி வேகத்தில் பெரிய அளவில் மாற்றம் வருகிறது. 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது போன்ற ஆய்வுகளில் பயங்கர நிலநடுக்கங்களின் அளவு அதிகரித்து வந்துள்ளது.

ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை இது போன்ற புவி சுழற்சி வேகம் குறைந்து, 5 வது ஆண்டில் அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும். 2018 ம் ஆண்டில் துவங்க உள்ள அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்களுக்கான புவியின் சுழற்சி வேக குறைவு 4 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.