ரயிலை திசைதிருப்ப முயற்சித்த, மன்னார் மாணவனுக்கு நடந்த விபரீதம்.!
தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் ரயிலை திசைதிருப்பி அபாயத்தை ஏற்படுத்த முயன்றதாக தெரிவித்து பாடசாலை மாணவன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச் சம்ப வம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பேசாலை பகுதியில் இடம்பெற்றது.
தலைமன்னார் பியரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தபால் ரயில் இரவு 9.45 மணிக்கு பேசாலை ரயில்வே நிலையத்தை வந்தடைந்ததும் ரயில் ஓடும் சரியான பாதையை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை ரயில்வே நிலையம் முயற்சித்தபோது அது பயனளிக்காமையால் அதிகாரிகள் ரயில்வே நிலையத்திலிருந்து 300 மீற்றர் தூரத்திலுள்ள தண்டவாளங்களை இணைக்கும் இடத்துக்குச் சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது தண்டவாளங்களை இணைக்கும் இடைவெளியில் இரு கற்களை வைத்து இரு பாதைகளை இணைக்க முடியாதவாறு செயற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இது விடயமாக பேசாலை ரயில்வே அதிகாரியினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.ஆர்.சிறில் தலைமையிலான பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
அப்பகுதியால் தனியார் வகுப்புக்குச் சென்றுவரும் ஒரு பிரபல பாடசாலையைச் சேர்ந்த உயர் கல்வி கற்கும் மாணவர் ஒருவரால் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சந்தேகநபரான மாண வன் கைது செய்யப்பட்டு மன்னார் மாவ ட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஆ.கி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படு த்தியபோது இம் மாணவனை எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்