ரஷ்யாவில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ நா....களும் இப்பொழுதே பெட்டியை கட்டவேண்டும்!! புட்டினின் அதிரடி
ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 755 பேரையும் உடனே நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மற்றும் சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்க வகைசெய்யும் சட்ட மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முடிவு செய்திருப்பதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
இதையடுத்து, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்குப் பதிலடியாக, ரஷ்யாவில் பணியாற்றும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பலரை ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் நாட்டை விட்டு வெளியேற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இப்போது எதிர்பார்த்ததைப் போலவே விளாடிமிர் புட்டின், ரஷ்யாவிலிருக்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 755 பேரையும், உடனே நாட்டை விட்டு வெளியேறச் சொல்லி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனால், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ளது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்