24 பேருடன் பயணித்த கப்பலை காணவில்லையாம்! யார் கடத்தியது என்று தெரியுமா?
24 கப்பல் பணியாளர்களுடன் பயணித்த தென்கொரிய சரக்கு கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளது.
தென் அட்லண்டிக் பகுதியில் இறுதியாகக் கப்பலின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கப்பலை தேடும் பணியில் பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றன.
கப்பலை தேடும் பணி மும்முரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில் கப்பலில் பயணித்திருந்த இரு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
கப்பலில் 8 கொரியர்களும் 16 பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும் இருந்துள்ளனர். இருவர் மீட்கப்பட்டுள்ள போதும் ஏனையவர்களை காணவில்லை அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்