Header Ads

அதிரடியாக வீட்டை விட்டு எஸ்கேப் ஆகிய பிரபல நாட்டின் ஜனாதிபதி! என்ன நடந்தது தெரியுமா ?

பிரேசில் ஜனாதிபதி மிசெல் தெமர் (76) தனது மனைவி மர்சிலா (33) மற்றும் தனது மகன்மிசெல் சின்கோ (7) ஆகியோருடன் ஆல்வோரட அரண்மனையில் வசித்து வந்தார். 


இந்த வீட்டில் சில நாட்களாக கணவன் மற்றும் மனைவி இருவரும் சில அமானுஷ்ய விஷயங்களை உணர்ந்துள்ளனர் இதனால் இருவரும் இரவு தூங்கமுடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும், மர்சிலா பாதிரியார் ஒருவரை வீட்டுக்கு அழைத்து வந்து பேய் மற்றும் ஆவிகள் இருக்கிறதா என சோதித்தும் பார்த்துள்ளார். 


இதனிடையில், வீட்டை காலி செய்ய முடிவெடுத்த ஜனாதிபதி மிசெல் துணை ஜனாதிபதிக்கான வீட்டில் தற்போது தன் மனைவி மற்றும் மகனுடன் குடிபெயர்ந்துள்ளார். ஜனாதிபதியின் இந்த செயல் பிரேசிலில் பரபரப்பை ஏறப்படுத்தியுள்ளது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.