பாரிஸ் நகரில் எலிகள் அதிகம்தான்! ஆனால் அதை ஒழிக்க ஒதுக்கப்பட்ட நிதிகள் எவ்வளவு தெரியுமா ? அசந்து போவீர்கள்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.
பாரீஸ் நகரில் எலிகளை ஒழிக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
பாரீஸ்:
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் எலிகளின் தொல்லை அதிக அளவில் உள்ளது.
அவற்றை ஒழிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொல்லை தரும் எலிகளை ஒழிக்க மாநகராட்சி ரூ.150 கோடி ஒதுக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது.
பாரீஸ் நகரின் வீதிகள் மற்றும் பொது மக்கள் நடமாடும் பகுதிகள் மற்றும் குப்பை கிடங்குகள் சாக்கடை கால்வாய்கள்,
திறந்த வெளி காலியிடங்களில் பொறிகள் மற்றும் மருந்துகள் வைத்து எலிகளை அழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகவலை பாரீஸ் நகர மேயர் ஆன்னி ஹிடால்கோ தெரிவித்தார்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்