புதுக்குடியிருப்பில் இராணுவத்தின் போக்கிரித்தனம் வெளிச்சத்திற்கு வந்தது: நடந்ததை பாருங்கள்
புதுக் குடியிருப்பில் தமது வசம் இருந்த வீடுகளை, ராணுவத்தினர் நேற்று சனிக்கிழமை விடுவித்திருந்தார்கள். ஆனால் அதற்கு முன்னதாக வெள்ளிக்கிழமை இரவு. வழமைக்கு மாறாக ராணுவ வாகங்கள் சிலவற்றில் அவர்கள் வந்து பொருட்களை ஏற்றிச் சென்றதாக அயலவர்கள் தெரிவித்தார்கள். சனிக்கிழமை காலை விடுவிக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று பார்த்தவேளை, கதவுகள், ஜன்னல்கள் என்று அனைத்தையும் ராணுவத்தினர் உடைத்து எடுத்துச் சென்றுவிட்டது தெரியவந்துள்ளது.
இதனை தான் இவர்கள் வெள்ளிக்கிழமை ஏற்றிச் சென்றுள்ளார்கள். இவ்வாறு படு போக்கிரியான சிங்கள ராணுவம் இன்றும் தமிழர்களை நிம்மதியகா இருக்க விடவில்லை என்பது தான் உண்மை. இனி வீடுகளை திருத்த எவ்வளவு லட்சம் தேவை என்பதனை பாருங்கள்.



No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்