Header Ads

பூனையென நினைத்து சிறுத்தைகளை வளர்த்த சிறுவன்: என்ன நடந்திருக்கும்



சிறுவன் ஒருவர் பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை வளர்த்து வந்துள்ள சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திரமாநில விசாகபட்டினத்தை சேர்ந்த, பழங்குடியின சிறுவன் ஒருவர் தான் வசித்து வந்த பிரதேசத்திலுள்ள பற்றைக்காடுகளிலிருந்து பூனைக்குட்டிகள் என நினைத்து, இரண்டு சிறுத்தை குட்டிகளை மீட்டு வளர்த்து வந்துள்ளார்.

மேலும் குறித்த சிறுத்தை குட்டிகளுக்கு உணவளித்து பராமரித்து வந்துள்ளநிலையில், அயலவர்களால் அவை பூனை குட்டிகளல்ல, சிறுத்தை குட்டிகள் என அறிவுறுத்தப்பட்டவே, வனத்துறை அதிகாரிகளின் ஊடாக குறித்த சிறுத்தை குட்டிகள், காட்டிற்குள் விடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.