போட்டோ எடுக்க தான் ஜெனிவா செல்கிறேன் : சுமந்திரன் சொன்ன வார்த்தை இவை தான் மக்களே
ஜெனீவாவினில் சென்று செய்யவேண்டியவற்றினை செய்துவிட்டதால் திரும்பி அங்கு செல்லவேண்டியிருக்க தேவையில்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.
தமிழ் மிரர் பத்திரிகையாசிரியர் ஏ.பி.மதனால் எழுதப்பட்ட நூல் வெளியிட்டு நிகழ்வினில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சார்பினில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் பங்கெடுத்திருந்தார்.பிரதம விருந்தினராக இலங்கைப்பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் அரச அமைச்சர்கள் மனோகணேசன்,ஹக்கீம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்னதாக ஊடகவியலாளர்களிடையே கருத்து வெளியிட்ட அவர் ஜெனீவாவினில் சென்று செய்யவேண்டியவற்றினை செய்துவிட்டதால் திரும்பி அங்கு செல்லவேண்டியிருக்க தேவையில்லையென தெரிவித்த அவர் இப்போது செல்பவர்கள் புகைப்படமெடுக்க செல்வதாக தெரிவித்தார்.
ஆனால் சுமந்திரன் சென்று செயலாளர் நாயகத்தை சந்தித்து , போட்டோ எடுத்து தனது ரிவீட்டரில் வெளியிட்டுள்ளார். அப்படி என்றால் , பிறரை குற்றஞ்சாட்டும் இவர் , ஏன் தான் சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் ?
தமிழ் இனத்தின் அடுத்த துரோகி சுமந்திரன் தான். இதனை ஏன் தமிழர்கள் இன்னும் உணர்ந்துகொள்ளவில்லை ?

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்