பேர்மிங்ஹாம் நகரம் இரவோடு இரவாக சுற்றிவளைப்பு: வாடகை கார் யார் கொடுத்தது என்று விசாரணை
நேற்று லண்டனில் இடம்பெற்ற கார் தாக்குதலுக்கு, தீவிரவாதி புது கார் ஒன்றை பாவித்துள்ளார். 2016ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட ஹயுண்டாய் காரை பாவித்தே அவர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். இதனை அடுத்து குறித்த கார் ஒரு வாடகை கார் கம்பெனிக்கு சொந்தமானது என்று அறிந்த பொலிசார். அந்த வாடகை கார் கம்பெனி இருக்கும் இடத்தையும். அதனை சூழவுள்ள பகுதியையும் சுற்றிவளைத்துள்ளார்கள்.
இரவோடு இரவாக அவர்கள் அவ்விடத்தை சுற்றிவளைத்து சுமார் 12 பேரைக் கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது. வாடகைக்கு காரை எடுத்துக்கொண்டு வந்து தான் இன் நபர் தாக்குதலை நடத்தியுள்ளார். அவர் காரில் அதிவேகமாக வரும்போது, சுமார் 40க்கும் மேற்பட்ட நபர்கள் மீது இடித்துள்ளார். முதலாவது நபரை அவரது கார் இடித்தவேளை. அன் நபர் தூக்கி எறியப்பட்டு, தேம்ஸ் நதிதில் வீழும் காட்சி கூட CCTV கமராவில் பதிவாகியுள்ளது.
அதிர்வின் வாசகர்களுக்காக இதோ அந்த காணொளி:

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்