Header Ads

சுமந்திரனை போட்டுதள்ளப்போவது இவர்களா ? அதிர்ச்சி....

அர­சி­யலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­தினை மீண்டும் அமுல்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதனை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆத­ரிக்­கின்­ற­மை­யி­னா­லேயே தமிழ் பிரி­வி­னை­ வா­திகள் அவரை கொலை செய்ய முயற்­சிக்­கின்­றனர் என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் ஊட­கப்­ பேச்­சாளர் வசந்த பண்­டார தெரி­வித்தார். 


நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளி னால் நாடு பிள­வு­பட்டு மிகப்­ பெ­ரிய அச்­சு­றுத்­தலை சந்­திக்க போகின்­றது. நாட்டில் சமஷ்டி ஆட்­சியும் உரு­வா­கி­ விடும் என்றும் அவர் குறிப்­பிட்டார். தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் ஏற்­பாட்டில் தேசிய நூல­கத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார், அவர் மேலும் தெரி­விக்­கையில், ஒரு­பு­றத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு வேண் டாம் என்­கிறார். ஐக்­கிய தேசியக் கட்சி வேண்டும் என்­கி­றது. ஆனால் இது அர­சி­ய­லமைப்­பினை 3 இல் 2 பெரும்­பான்­மையை பெற்று நிறை­வேற்­றிக் ­கொள்­வ­தற்­கான நாடகம் என்றே நாம் பார்க்­கின்றோம். 


மேலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் 13 ஆவது திருத்­தத்­தினை வலுப்­ப­டுத்­தினால் அதனை ஏற்­றுக் ­கொள்ள தாங்கள் தயார் என்ற நிலைப்­பாட்டில் உள்ளார். அதனால் கடு­மை­ யாக தமிழ் இன­வாதம் பேசு­கின்­ற­வர்கள் அவரை கொலை செய்ய முயற்­சிக்­கின்­றனர். மறு­பு­றத்தில் சுதந்­திரக் கட்­சியில் உள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அணியும் கூட தற் ­போது 13 ஆவது திருத்­தத்தினை மீண்டும் உயிர்ப்­பித்து மாகாண சபைக்­கான காணி, பொலிஸ் மற்றும் நிதி கையா­ளு­கைக் ­கான அதி­கா­ரங்­களை முத­ல­மைச்­சர்கள் வச­மாக்க ஆத­ர­வா­கவே உள்­ளது. இதனால் நல்­லா ட்சி அர­சாங்கம் தமிழ் பிரி­வி­னை­ வா­தி­களை முழு­மை­யாக திருப்­தி­ய­டையச் செய்ய முயற்­சித்து வரு­கின்­றது. 



அதனால் தான் அண்­மையில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க சிங்­க­ள­வர்­களை புதிய அர­சி­ய­லமைப்­பின் ஊடாக மண்­டி­யிட வைக்க வேண்டும் என்று குறிப்­பிட்­டுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ போரில் தமிழ் மக்­களை கொன்று குவிக்­க ­வில்லை. மாறாக தீவி­ர­வா­தி­க­ளையே கொன்றார். எனவே அதற்­காக சிங்­கள மக்­க ளை குறை கூறு­வது அர்த்­த­மற்­ற­தாகும். யார் என்ன கூறி­னாலும் மாகாண சபை­களின் அதி­கா­ரங்­களை வலுப்­ப­டுத்தி ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரத்­தினை குறைத்து மறு­பு­றத்தில் திட்­ட­மிட்ட வகை யில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சியல் வாழ்க்­கையை அஸ்­த­ம­ன­மாக்கும் முயற்­சியில் நல்லாட்சியினர் ஈடுபட்டுள்ளனர். 


அதனால் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் தொடக்கம் சகல விதமான கோரிக்கைகளும் தமிழ் பிரிவினை வாதிகளுக்கு மீள வழங்கப் படப் போகின்றன. அதனால் புதிய அரசி யலமைப்பினால் தேசம் மிகப் பெரிய அச் சுறுத்தலை எதிர் கொள்ள போகின்றது என் றார்.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.