தனது நண்பனை காப்பாற்ற ஓடும் ரயிலின் கீழ் 2 நாள் இருந்த நாய் இது தான்
ரயில் தண்டவாளம் ஒன்றில் அடிபட்டு படுகாயமடைந்த நிலையில் ஒரு நாய் இருந்துள்ளது. குறித்த அந்த நாயால் அடி எடுத்து வைக்க முடியவில்லை. இன் நிலையில் தனது நண்பரான அந்த நாய் அடிபட்டு கிடப்பதை பார்த்த இந்த நாய் குரைத்து கூப்பாடு போட்டு உதவி கோரியுள்ளது. ஆனால் எவரும் வரவில்லை. இன் நிலையில் அது தனது நண்பரை விட்டு பிரியவிலை.
அதனுடன் அங்கே படுத்துவிட்டது. மணிக்கு ஒரு தடவை என்று மேலே ரயில் ஓடும் போது அவை கிடு நடுங்கிப் போகும். ஆனாலும் அது அங்கிருந்து நகர்ந்தபாடாக இல்லை. இதனை அவதானித்த சிலர் அங்கே என்ன நடக்கிறது என்று அருகில் சென்று பார்த்தபோது நிலமை புரிந்துள்ளது. உடனே இரக்க குணம் கொண்ட அவர்கள், இரண்டு நாய்களையும் காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.
குறித்த 2 நாய்களுமே உணவின்றி 2 நாட்கள் அந்த தண்டவாளத்தில் கிடந்துள்ளது. நாய் என்பது மிகவும் நன்றியுள்ள தனது எஜமானுக்காக உயிரையும் கொடுக்க துணிந்த ஒரு பிராணி ஆகும். இது எந்த ஒரு சந்தேகமும் இல்லை எனலாம்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்