புத்தளம் காட்டுப்பகுதியிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள்..!
புத்தளம் 2ஆம் கட்டை மதுரகம பிரதேசத்தின் காட்டுப்பகுதியிலிருந்து, நேற்று வெள்ளிக்கிழமை சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் இன்று சனிக்கிழமை தெரிவித்தனர்.
பொலிஸ் அவச பிரிவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், ஸ்தலத்துக்கு விரைந்த புத்தளம் பொலிஸார், குறித்த சடலத்தின் எச்சங்களை மீட்டுள்ளனர்.
குறித்த சடலத்தின் எச்சங்கள் அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ளதாகத் தெரிவித்த புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்