30 நாட்களாக கடத்தப்பட்ட நபரை அதிரடியாக மீட்ட பொலிஸ் வீடியோ
பிரேசில் நாட்டில் கடந்த 30 நாட்களாக பெரும் செல்வந்தர் ஒருவரை ஒரு கும்பல் கடத்தி வைத்திருந்து பெரும் கப்பம் கோரி வந்தது. அவர்கள் கோரிய பணத்தை கொடுத்தும் கூட அக் கும்பல் அவரை விடுவதாக இல்லை. இன் நிலையில் அதிரடி முடிவை எடுத்த ஆயுதப் பொலிசார் தாம் சந்தேகப்பட்ட ஒரு கட்டிடத்தை ஆயுத முனையில் சூழ்ந்து. அதிரடியாக உள்ளே சென்று குறித்த செல்வந்தரை மீட்டுள்ளார்கள்.
அவர்கள் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டில் கமரா பொருத்தப்பட்டு இருந்துள்ளது. அதில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்