தமிழீழ தேசிய தலைவரது பிறந்த நாள் இன்றாகும்
தமிழீழ தேசிய தலைவரது பிறந்த நாள் இன்றாகும் (26.11.2016) அவர் 1954ம் ஆண்டு வல்வையில் பிறந்தார். இன்று அவரி அகவை 62 ஆகும் .... தமிழர்களின் துயர் தீர்க்க வந்த பெரும் தலைவர். அவருக்கு பிடித்த விடையங்கள்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்..
சோழர்களின் ஆழுமை
புத்தகம் படிப்பது
ராணுவ தளபாடம் தொடர்பாகவும் உளவுத் துறை தொடர்பாகவும் அனைத்து விடையங்களையும் அறிந்து வைத்திருப்பது.
தனது 14 வயதில் புலிகள் அமைப்பை ஆரம்பித்த தலைவர், 2009ம் ஆண்டு வரை தனது இலக்கை அடைய போராடினார். 2009ம் ஆண்டு புலிகள் தமது துப்பாக்கிகளை மெளனிப்பதாக அறிவித்தார்கள். புலிகளுடம் இலங்கை ராணுவம் மட்டுமல்லாது , இந்திய ராணுவமும் இணைந்து போர் தொடுக்க. அமெரிக்க புலனாய்வு தகவல், பாக்கிஸ்தான் மற்றும் இஸ்ரேலின் குண்டுகள். சீனாவின் பின்னணி மற்றும் ரஷ்யாவின் ஆட்டிலறிக் குண்டுகள் என்று. உலகில் உள்ள அத்தனை வல்லரசின் கரங்கள் கொண்டு எமது விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட்டது. இதனை சிங்களம் வெற்றி என்று கூறுகிறது. ஆனால் மாவிரனுக்கு ஏதடா மரணம் என்கின்றர் தமிழர்கள்.... லட்சியம் ஒருபோதும் அழிவதும் இல்லை அழிக்கப்படுவதும் இல்லை.... போராட்டங்கள் என்றும் முடிவடைந்து விடுவதும் இல்லை...

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்