உறவுக்கு சம்மதிக்காத அண்ணி! கொழுந்தன் செய்த கொடூர செயல்!
உத்திரபிரதேச மாநிலத்தில் உறவுக்கு சம்மதிக்காத அண்ணியை எரித்து கொன்ற கொழுந்தனை போலீசார் தேடி வருகின்றனர்.
உபி மாநிலம், பதுன் மாவட்டத்தில் உள்ள லபரி கிராமத்தில் வசித்து வருபவர் நீலம், இவரது கணவர் சமீபத்தில் இறந்து விட்டார்.
கணவன் இறந்த பின்பு தனிமையில் வசித்து வருகிறார். இந்நிலையில், கணவரின் சகோதரன் ஜிதேந்திரன் என்பவர் நீலத்திற்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
இதனை நீலம் கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் பாலியல் உறவுக்கு சம்மதிக்காததால் மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்துள்ளார்.
இதில் நீலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதன் பின்னர் அங்கிருந்து ஜித்தேந்திரன் தப்பிச்சென்று விட்டான். இது பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ஜித்தேந்திரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்