பணத்தை ஏமாற்றிய, குளோபல் லைப்ஸ்ரைல் லங்கா தனியார் நிறுவனம்..! யாழில் ஆர்ப்பாட்டம்..
குளோபல் லைவ்ஸ்ரைல் லங்கா தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் பிரமிட் முறையிலான வியாபார முறை மூலம் ஏமாற்றப்பட்ட மக்கள் நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வியாபாரம் தொடர்பாகத் தெளிவூட்டும் நிகழ்வு யாழ். சாவகச்சேரியில், அந்த நிறுவனத்தின் முகவர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த நிறுவன முகவர்களால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி பலர் நிகழ்வு இடம்பெற்ற இடத்தில் தர்க்கத்தில் ஈடுபட்டதோடு, ஏமாற்றிய பணத்தை திருப்பி வழங்குமாறும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்த வியாபரத்தின் மூலமாக ஆயிரக்காணக்கானவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், திருப்பிக்கேட்டபோது பிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அங்கு வருகைதந்து எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் எமது செய்திப்பிரிவுக்குத் தெரிவித்தனர்.

No comments:
உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்