Header Ads

ஐஎஸ் தீவிரவாதிகள் கடத்திய, ரூ.376 கோடி மதிப்புடைய போதை மாத்திரைகள் பறிமுதல்..!


இத்தாலி: ஐஎஸ் தீவிரவாதிகள் இந்தியாவில் இருந்து கடத்தி சென்ற கோடிக்கணக்கான மதிப்புள்ள போதை மாத்திரைகளை இத்தாலி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து திரட்டப்பட்ட 2,040,000 டிராம்டோல் மாத்திரைகள் கன்டைனர்களில் அடைத்து லிபியா வழியாக கடத்த ஐஎஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த மாத்திரைகள் வலி நிவாரணியாக பயன்படுத்த கூடியவை.

மாத்திரைகள் அடைத்த கன்டைனர்கள் இத்தாலியின் ஜியோயா டூரோ துறைமுகத்தில் இறக்கப்பட்ட போது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர். அப்போது ஐஸ் தீவிரவாகிகளின் திட்டம் அம்பலமானது. இந்த மாத்திரைகளின் சந்தை மதிப்பு 376 கோடி ரூபாய் என்று தெரிகிறது. போரில் ஈடுபடும் ஐஸ் தீவிரவாதிகளுக்கு தல இரண்டு யூரோ என்ற விலையில் இவற்றை விற்க ஐஸ் அமைப்பினர் முடிவு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. 

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.