Header Ads

யாழ். பண்­ணைக் கட­லுக்­குள் கலக்கும் மலக் கழி­வு­!

யாழ். பண்­ணைக் கட­லுக்­குள் யாழ்ப்­பா­ணம் சிறப்பு அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் நேர­டி­யா­கவே தனி­யான குழாய் வழி­யா­கப் செலுத்­தப்­ப­டு­வது தொடர்­பில் எவ­ருமே கண்­டு­கொள்­ள­வில்­லை­யென அந்­தப் பகுதி மக்­கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அதி­ர­டிப்­படை முகா­மின் கழி­வு­கள் அதன் அருகே உள்ள ஒரு வெற்று நிலப்­ப­ரப்­புக்­குள் தொட்டியினூடாக விடப்பட்டு நேர­டி­யா­கவே தனி­யான குழாய் வழி­யா­கப் பண்­ணைக் கட­லுக்­குள் செலுத்­தப்­ப­டு­வது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

மிக­வும் இர­க­சி­ய­மான முறை­யில் இந்த நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

முகா­மின் கழி­வு­கள் அனைத்­தும் நிலத்­துக்குக் கீழான குழாய் மூலம் கொண்­டு­வ­ரப்­பட்டு கட­லி­னுள் செலுத்­தப்­ப­டு­கி­றது.

அதி­லி­ருந்து எழும் துர்­நாற்­றம் சகித்­துக்கொள்­ள­ மு­டி­யா­த­ளவு உள்­ளது. மலக் கழி­வு­க­ளும் இதன் மூலம் அகற்­றப்­ப­டு­கின்­றதா எனக் கரு­து­ம­ள­வுக்கு அந்­தக் கழி­வு­களில் இருந்து பெரும் துர் நாற்றம் எழுகின்றது.

இத­னால் அந்­தக் கடற்­க­ரைப் பிர­தே­சம் மாச­டை­வது மட்­டு­மன்றி கட­லுக்­குச் செல்­லும் தொழி­லா­ளர்­க­ளுக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

இதனை அண்­டிய பகு­தி­யின் ஊடா­க­வும் தொழி­லா­ளர்­கள் கட­லுக்­குச் செல்­கின்­ற­னர். அவர்­க­ளுக்­குத் தோல் நோய்­கள் தொற்­றும் அபா­ய­மும் ஏற்­ப­டுமோ என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சுகா­தா­ரத் திணைக்­க­ளம் இதனை கண்டுகொள்ள மாட்டாது என்று அந்தப் பகுதி மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்­பில் சுகா­தார அதி­கா­ரி­கள் கடற்­றொ­ழில் திணைக்­கள அதி­கா­ரி­கள் மற்­றும் மாந­கர சபை­யி­னர் உட­னடி நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் எனவும் பிர­தே­சத்­தைச் சேர்ந்த மக்­கள் கோரிக்கை விடுத்­த­னர்.

இத­னைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய சுகா­தா­ரத் திணைக்­க­ளம் மற்­றும் கடற்­றொ­ழில் திணைக்­க­ளம் என்­ப­ன­வும் இதே பண்­ணைப் பகு­தி­யி­லேயே அமைந்­துள்­ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

உங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்

Powered by Blogger.